search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்பல்லோ மருத்துவர்கள்"

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று 2 அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். #JayaDeathProbe #ArumugasamyinquiryCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்கள்.

    அப்பல்லோவில் உள்ள தொற்றுநோய் தடுப்பு சிறப்பு டாக்டர் ராமகோபால கிருஷ்ணன், தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன், நரம்பியல் சிகிச்சை பிரிவு டெக்னீசியன் யுவஸ்ரீ ஆகியோர் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இன்று மயக்கவியல் துறை டாக்டர் மின்னல் எம்போர, டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.


    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குமூலம் கொடுப்பதால் விசாரணையில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொருவர் கொடுக்கும் வாக்குமூலமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த டாக்டர்களிடம் ஏற்கனவே சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர். அடுத்தகட்டமாக மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

    டாக்டர்களிடம் விசாரணை நடத்தி முடித்ததும் அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  #JayaDeathProbe #ArumugasamyinquiryCommission
    மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே ஜெயலலிதாவுக்கு நோய் பாதிப்பு இருந்ததா? என்பதை கண்டறிய அவர் பதவி ஏற்றபோது நடந்து வந்த வீடியோவை காண்பித்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ரேமான்ட் டோமினிக் சேவியோ, இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் கார்த்திகேசன் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர்.

    மருத்துவர் ரேமான்ட் தனது சாட்சியத்தில், ‘22.9.2016 அன்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, நான் உடன் சென்றேன். ஓரளவுக்கு நினைவுடன் இருந்த போதிலும் ஜெயலலிதா அந்த சமயத்தில் பேசும் நிலையில் இல்லை’ என்று கூறினார்.

    இதையடுத்து, 23.5.2016 அன்று ஜெயலலிதா முதல்- அமைச்சராக பதவி ஏற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி மருத்துவர் ரேமான்டுக்கு ஆணையத்தின் மூலம் காண்பிக்கப்பட்டது.

    அந்த வீடியோவை பார்த்து முடித்த பின்பு ஆணையம் தரப்பு வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி, ‘இந்த வீடியோவை பார்க்கும்போது ஜெயலலிதா மெதுவாக நடந்து வருகிறார். ஒருவர் நடந்து வருவதை பார்த்து அவருக்கு இருக்கும் நோயை கண்டறியும் தேர்வு மருத்துவ படிப்பில் உள்ளது. ஜெயலலிதா குனிந்தபடி மெதுவாக நடந்து வருவதன் மூலம் அவருக்கு இருதய நோய் பாதிப்பு இருந்ததா என்பதை கண்டறிய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவர் ரேமான்ட், அப்போதே ஜெயலலிதாவுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.



    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவருக்கு நோய் பாதிப்பு இருந்ததா? என்பதை கண்டறியவும், அவ்வாறு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், ஏன் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது குறித்தும் மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

    மருத்துவர் கார்த்திகேசன் அளித்த சாட்சியத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்று அவரது இதய துடிப்பை பரிசோதித்தேன். இதய துடிப்பு சரியாக இருந்தது. இதன்பின்னர் சீராக இல்லாத காரணத்தினால் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது’ என்று கூறினார். #Jayalalithaa #ArumugasamyCommission
    ×